Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னையில் நேற்று (மே 02) ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 231 பேரில் சென்னையில் மட்டும் 174 பேர் உள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,257 ஆக அதிகரித்துள்ளது. இது தமிழகத்தின் மொத்த பாதிப்பில் 45.59 சதவீதமாகும். நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பால், சென்னையில் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று அரியலூரில் 18 பேரும், காஞ்சிபுரத்தில் 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை பதிவான பாதிப்புகளில், 12 வயதுக்கு உட்பட்டவர்கள்-159 பேர், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள்-2318 பேர், 60 வயதை கடந்தவர்கள்-280 பேர்.