Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கும்பகோணம் ரத்னா சேகர் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்கினார்

ஏப்ரல் 15, 2020 04:27

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் முன்னாள் நகர் மன்றத் தலைவர் ரத்னா சேகர் ஒப்படைத்த 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை 800 குடும்பங்களுக்கு ஆணையர் லட்சுமி வழங்கினார். 

தூய்மைப் பணியாளர்கள், பாதாள சாக்கடைப் பணியாளர்கள், குப்பைப் கிடங்கில் பணியாற்றும் பணியர்ளகள், நலிவுற்று சுமை தூக்கும் தொழிலாளர்கள் என 800 குடும்பங்களுக்கு ஆணையர் லட்சுமி வழங்கினார்.

 

ஒரு மீட்டர் சமூக இடைவெளி விட்டு பணியாளர்கள் நிவாரணப் பொருட்களை பெற்றுச் சென்றனர்.

 அப்போது செய்திளார்களிடம் பேசிய நகராட்சி ஆணையர் லட்சுமி, நிவாராணப் பொருட்களை வழங்க விரும்பினால் தங்களிடம் மட்’டுமே ஒப்படைக்க வேண்டும் என்றும் அவற்றை மண்டல வாரியாக கணக்கெடுப்பு நடத்தி உரியர்வகளுக்கு  நிவாரணப் பொருட்கள் தங்கள் அதிகாரிகள் மூலம் நிச்சயம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.


 

தலைப்புச்செய்திகள்