Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசி, வீடியோ வெளியிட்ட பெண் உள்ளிட்ட 3 பேர் கைது

ஏப்ரல் 11, 2020 02:09

ராமநாதபுரம்: பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசி, வாட்ஸ் ஆப்பில் வீடியோ வெளியிட்ட பெண் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொரோனா வைரஸ் தொடர்பாக ஊரடங்கு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் மோடி குறித்து அவதூறாக பெண் ஒருவர் , வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதாக வி.ஏ.ஓ., ரேணுகா, எஸ்.பி.பட்டணம் போலீசில் புகார் அளித்தார்.

இதன்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், வீடியோ வெளியிட்டது, ராமநாதபுரம் மாவட்டம் பாசிபட்டணத்தை சேர்ந்த நைனார் பாத்திமா என்பது தெரியவந்தது. மேலும், அதே பகுதியை சேர்ந்த சீனி (47) மற்றும் இப்ராஹிம்(43) ஆகியோரும் வீடியோ தயாரிக்க உதவியது தெரியவந்தது. இதனையடுத்து, 3 பேர் மீதும் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

தலைப்புச்செய்திகள்