Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்கோணம்: கொரோனா வைரஸ் பரவலை முறியடிக்கும் விதமாக கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய மூன்று வட்டங்களில் இன்று நடைபெறும் 14 மணி நேர தொடர் சுய ஊரடங்கில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது.
அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. தூய அலங்கார அன்னை பேராலயத்தில் ஞாயிறு சிறப்பு திருப்பள்ளி ரத்து செய்யப்பட்டு தேவாலயம் நடை அடைக்கப்பட்டுள்ளது.
கோயில்கள் கடந்த 20ம் தேதி முதல் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது புதிய பேருந்து நிலையம் மூடப்பட்டுள்ளது, இரயில் நிலையமும் ஆள் அரவம் இன்றி காணப்படுகிறது பெரிய அளவில் வணிகர்களும், பொது மக்கள் இச்சுய ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு நல்கி வருகின்றன.