Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெருமாள் கோவில்களில் நடைபெற்ற ஸ்ரீ ரத சப்தமி நிகழ்ச்சி

பிப்ரவரி 01, 2020 11:17

கும்பகோணத்தில் பெருமாள் கோவில்களில் நடைபெற்ற ஸ்ரீ ரத சப்தமி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர். கோவில் நகரமான கும்பகோணத்தில் ஆண்டுதோறும் பெருமாள் கோவில்களில் ரத சப்தமி விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

ரதசப்தமி என்பது சூரியன், தனது தேரினை தக்க்ஷின பாகத்திலிருந்து உத்தர பாகத்திற்கு திருப்பி செலுத்துவதாகும். இந்த தினத்தில் பெருமாளை வணங்கினால் நினைத்த காரியும் கை கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்நிலையில் ஸ்ரீ சக்ரபாணி சுவாமி கோவிலில் நடைபெற்ற ரதசப்தமி நிகழ்ச்சியில் பெருமாள் சூர்ய பிரபையில் சேவை சாதித்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதே போன்று சாரங்கபாணி, ராமசாமி கோவிலிலும் பெருமாள் சூர்ய பிரபையில் சேவை சாதித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
 

தலைப்புச்செய்திகள்