Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி, அனைத்து மதுபானக்கடைகளும் 7 நாட்கள் விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
இதன்படி, வரும் டிசம்பர் 25ஆம் தேதி மாலை 5 மணிமுதல், 27ஆம் தேதி மாலை 5 மணி வரையிலும், 28ஆம் தேதி மாலை 5 மணி முதல், 30ஆம் தேதி மாலை 5 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜனவரி 2ஆம் தேதியிலும் அனைத்து டாஸ்மாக் கடைகளும், மதுபானம் அருந்தும் இடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தடையை மீறி, மதுபானங்களை விற்பனை செய்தால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்ட ஆட்சியர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்