Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தஞ்சை: தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எதிரே உள்ள திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சாணத்தை வீசியும், கறுப்பு பேப்பரால் கண்களை மறைத்தும் அவமரியாதை செய்துள்ளனர்.
இன்று காலை இதனை கண்ட அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சிலையை சுத்தம் செய்து, மாலை அணிவித்தனர். திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து அப்பகுதியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மர்ம நபர்கள் குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுப்பதாக போலீசார் சமாதானப்படுத்தியதை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.