Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குஜராத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழப்பு

செப்டம்பர் 30, 2019 02:36

குஜராத்: குஜராத் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். பனஸ்கந்தா மாவட்டத்தின் அம்பாஜி கோயிலில் இருந்து 50க்கும் மேற்பட்ட பக்தர்களை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்து, திரிசுலியா என்ற இடத்தில் லாரியுடன் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து பற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகுந்த வலியை தருவதாக பிரதமர் நரேந்திரமோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும், விரைவில் அவர்கள் குணமடைவார்கள் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்