Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாகை: நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பூந்தாழை பகுதியில், காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு மதுபாட்டில்கள் கடத்துவதாக தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது.
சோதனையில் ஈடுபட்ட போலீசார், அந்த வழியாக வந்த சொகுசு காரை வழிமறித்தும், கார் நிற்காமல் சென்றது. சந்தேகமடைந்த போலீசார், விரட்டி சென்றனர். போலீசாரிடம் இருந்து தப்பி செல்ல காரை அதிவேகமாக இயக்கியபோது கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.
காரில் கடத்தி வரப்பட்ட 2880 மதுபாட்டில்கள் சாலையில் சிதறி கிடந்தன. இதனை பொதுமக்கள் அள்ளிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட காரைக்காலை சேர்ந்த ஓட்டுநர் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர்.