Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடி அறிமுகம்.

செப்டம்பர் 26, 2019 01:12

சென்னை: சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் அக் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார்.
 
பின்னர் செய்தியாளரிடம் செந்தில்குமார் கூறியதாவது: ஜெ. பேரவை கலைக்கப்பட்டதால் நாங்கள் கட்சியை தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அம்மா மறைவிற்குப் பிறகு ஆதரவற்று இருந்த நிலையில் தீபாவை கட்சி தொடங்க வலியுறுத்தினோம்.

ஆனால் அவரால் தொடர்ந்து இயக்கத்தை நடத்த முடியவில்லை. எம்ஜிஆர் கொள்கை மற்றும் அம்மாவின் வழியில் நடக்க நாங்கள் தனி கட்சி துவக்கினோம். மேலும் அதிமுக எங்கள் கொள்கைக்கு உடன்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு தர தயாராக இருக்கிறோம்.

எங்கள் கட்சியின் கொள்கையாக, பெரு நகரங்களையும் கிராமங்களையும் இணைக்கும் தரமான சாலைகள் அமைக்கப்படவேண்டும், சென்னையின் நெரிசலை தவிர்க்கும் விதமாக கிராமங்கள் தோறும் தொழிற்சாலைகள் கல்வி கூடங்கள் அமைக்கப்பட வேண்டும், இன்றுவரை மின்சார வசதி இல்லாத மலையில் உள்ள கிராமங்களுக்கு மின்சார இணைப்பு வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை வகுத்துள்ளோம் என்று கூறினார்.

தலைப்புச்செய்திகள்