Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெரியாரின் 141 வது பிறந்தநாள்: டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை

செப்டம்பர் 17, 2019 03:06

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் தந்தை பெரியாரின் 141 வது பிறந்தநாளை முன்னிட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச்செயலாளர் ரங்கசாமி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் அரசன் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

மாலை அணிவித்துவிட்டு, பத்திரிகையாளர் சந்தித்து பேட்டி அளித்தபோது இந்தியை எதிர்க்கவில்லை. ஆனால் இந்தி திணிப்பதை தடுக்க வேண்டும்  மத்திய அரசு இந்தியை தமிழ்நாட்டில் திணிக்காது என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். 


அமுமுகவின் செல்வாக்கு வளர்ந்து வருவதாகவும் வருங்காலத்தில் அமுமுக தான் தமிழகத்தின் மிகப்பெரிய சக்தியாக பெரியகட்சியாக விளங்கும் எனவும் தெரிவித்தார்.

சசிகலாவை விரைவில் ஜெயிலில் இருந்து விடுவிக்க முயற்சி செய்து வருவதாகவும் சசிகலா வந்தவுடன் அமுமுக அதிமுக இணைக்கப்படும் என்று கேட்டதற்கு வதந்திகளுக்கு பதில் கூற முடியாது என தெரிவித்தார். 

கர்நாடக மாநில பொறுப்பாளர் புகழேந்தி அமுமுக கட்சி தமக்கு தான் சொந்தம் என்று கூறுவதற்கு என்ன காரணம் என கேட்டதற்கு அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல எனக்கு நேரம் இல்லை தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்