Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நேர்த்தி கடன் தீர்க்க அந்தரத்தில் பறந்து வந்து அம்மனுக்கு மாலை அணிவித்த பக்தர்

செப்டம்பர் 13, 2019 08:17

போளூரில்  நேர்த்தி கடனை தீர்க்க  அந்தரத்தில் பறந்து வந்து அம்மனுக்கு மாலை அணிவித்தார் ஒரு பக்தர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் முத்துமாரியம்மன் கோவில் கூழ்வார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைதொடர்ந்து அம்மனுக்கு வேண்டுதல் நிறைவேற்றும் நேர்த்தி கடன் நிகழ்ச்சி போளூர் பழைய பஸ்நிலையத்தில் நடைபெற்றது.  

முதுகில் அலகு குத்தி அந்தரத்தில் பறந்து வந்து முத்துமாரியம்மனுக்கு மாலை அணிவித்து தீபாராதனை செய்தார். வேண்டுதல் நிறைவேற்ற அம்மன் வேடமணிந்து பொய்கால் ஆட்டமும் நடைபெற்றது.

அந்தரத்தில் பறந்து வந்து முத்துமாரியம்மனுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்