Thursday, 23rd May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுச்சேரி: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலாவின் பிறந்த நாளையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கட்சி நிர்வாகிகள் நல திட்டங்கள் மற்றும் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயத்தில் மாநில அவைத் தலைவர் சுத்துகனி பாஸ்கர் தலைமையில் தங்கத் தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இறுதியாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.