Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுச்சேரியை மீண்டும் பிரெஞ்சு அரசு ஆள வேண்டும்: மக்கள் பணி மையத்தினர்

ஆகஸ்டு 04, 2019 03:29

புதுச்சேரி: இந்தி பிரெஞ்சு ஒப்பந்தத்தை மீறிய மத்திய அரசை கண்டித்தும், புதுச்சேரியை மீண்டும் பிரெஞ்சு அரசு ஆள வேண்டும் என கோரி மக்கள் பணி மையத்தினர் அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்திய பிரஞ்சு ஒப்பந்தத்தை மத்திய அரசு மீறிவிட்டதாக கூறியும், புதுச்சேரி மக்களின் கருத்துக்களை கேட்காமல் மத்திய அரசு யூனியன் பிரதேச சட்டத்தை உருவாக்கி அதன் கீழ் புதுவையை இணைத்துவிட்டதை கண்டித்தும், புதுவை மக்களிடம் மீண்டும் இந்தியாவுடன் தொடர்வதா வேண்டாமா என கருத்துக்களை கேட்க வேண்டும் என கோரியும், பிரெஞ்சி அரசு புதுவையை ஆள வேண்டும் என வலியுறுத்தி புதுவை மக்கள் விரும்புகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள் மக்கள் பணி மையத்தினர் அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
 

தலைப்புச்செய்திகள்