Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாட்டின் எதிர்கால கல்வியை தீர்மானிக்கின்ற புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அதை திரும்பப் பெற வேண்டும் என்று ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் கட்சியின் சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு கடலூரில் நடைபெற்றது.
ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் கட்சியின் மாநில தலைவர் அல்கஃபி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது கட்சியின் மாவட்ட தலைவர் மன்சூர், மாநில செயலாளர் அஷ்ரப் அலி, மாநில பொருளாளர் மூசா, பக்கீர் முஹம்மது அல்தாபி மாநிலத் தலைவர் உட்பட பலரும் உடனிருந்தனர்.