Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மழைநீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

ஆகஸ்டு 02, 2019 08:31

கும்பகோணம்: கும்பகோணத்தில் திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும் மழைநீர் சேமிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இப்பள்ளியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கையில் பதாகைகளை ஏந்தியும் மழைநீர் சேமிப்போம் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று கோஷங்கள் எழுப்பியும்  அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக வந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களும் வழங்கினர்கள்.

இதில் பள்ளி தலைமையாசிரியர் மாசிலாமணி பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்