Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதற்கு மூன்று நாள்கள் முன்பு பேரூராட்சியாக சார்பாக தண்டோரா மூலம் அனைத்து கடைகளுக்கும் வியாபாரிகளுக்கும் தகவல் சொல்லப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இன்று காலை முதல் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் இவர்களுக்கு உறுதுணையாக செங்கம் காவல் துறை சார்பாக சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு செங்கம் பகுதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டது.
இதனால் சில வியாபாரிகள் மன வேதனையில் உள்ளனர், ஆனால் இன்று ஒரு நாள் மட்டும் இது நடக்க கூடாது. இது இதுபோல் தொடர்ந்து செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.