Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விடுதலை சிறுத்தை கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜுலை 26, 2019 03:38

கும்பகோணம்: கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் விவசாய தொழிலாளர் விடுதலை இயக்கம் சார்பில் கடலில் வீணாக கலக்கும் நீரை தென்னிந்திய நதிகளோடு இணைத்திடு அழியும் விவசாயத்தை பாதுகாத்திடு, தேவையான மின்சார உற்பத்தியை அதிகப்படுத்து என்பனவற்றை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் விவசாய கடன்களை தள்ளுபடி செய், மத்திய மாநில அரசுகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கார்ப்பரேட் கம்பெனிக்கு துணை போகாமல் ரத்து செய்ய வேண்டும், மாநில அரசு சட்டமன்றத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தடை விதிக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், அதுவரை விவசாயிகள் நாங்கள் போராடுவோம்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காந்தி பூங்கா அருகில் மாவட்ட அமைப்பாளர் பாலகுரு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயம் பாதுகாப்பு இயக்க மாநில செயலாளர் பசுமைவளவன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கம் எழுப்பினார்கள்.
 

தலைப்புச்செய்திகள்