Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் சுமார் 1500 வருடங்கள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் தைமாதம் மூன்றாம் சனிக்கிழமை பிரதோஷம் மிக சிறப்பாக நடைபெற்றது.
இதில் நந்திக்கு 108 பால்குட சிறப்பு அபிஷேகமும், சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் மகாதீப ஆரார்தனை நடைபெற்றது.
இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து ண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேனுபுரீஸ்வரர் ஆலய நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது.