Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள பவுண்டரிகபுரம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் மனோஜ்13 ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரது மற்றொரு மகன் மகேந்திரன் 8 இவர் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் ஜெகதீஸ்வரன்11 இவன் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் மூவரையும் கடந்த 21ஆம் தேதி முதல் காணவில்லை.
இவர்களை அவர்களது உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் அவனது பெற்றோர் திருநீலக்குடி காவல்துறையிடம் புகார் செய்துள்ளனர். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் மூன்று மாணவர்கள் மாயமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது