Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உலக யோகா தினம்: 120 காவல்துறையினர் யோகாசனம் செய்தனர்

ஜுன் 21, 2019 06:09

கும்பகோணம்: உலக யோகா தினத்தை முன்னிட்டு கும்பகோணம் பாபநாசம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த 120 காவல்துறையினர் யோகாசனம் செய்தனர்.

கும்பகோணத்தில் உலக யோகா தினத்தை முன்னிட்டு ஈசா யோகா சார்பில் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் கும்பகோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நந்தகோபால் திருவிடைமருதூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் தலைமை காவலர்கள் போக்குவரத்துக் காவலர்கள் உள்ளிட்ட 120 க்கும் மேற்பட்ட காவலர்கள் உலக யோகா தினத்தை முன்னிட்டு சூரியநமஸ்காரம் நாடிசுத்தி மூச்சுப்பயிற்சி உள்ளிட்ட யோகாசனம் செய்தனர். 

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஈஷா யோகா மைய தன்னார்வு தொண்டு அமைப்பினர் சிறப்பாக செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்