Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாரதீய ஜனதாவின் வெற்றிப் பேரணியில் கையெறி குண்டு வீச்சு

மே 28, 2019 06:40

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 2014-ஆம் ஆண்டு 2 தொகுதிகளை மட்டுமே வென்ற பா.ஜ.க. இந்தத்தேர்தலில் 18 இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் பிர்பும் மாவட்டம் மயூரேஸ்வர் என்ற இடத்தில் பா.ஜ.க. சார்பில் வெற்றிப் பேரணி நடைபெற்றது.

அப்போது பேரணியில் சென்றவர்கள் மீது கையெறி குண்டு வீசப்பட்டது. இதில் எவருக்கும் காயமில்லை. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கையெறி குண்டு வீசியதாக குற்றம் சாட்டப்படும் நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்