Thursday, 23rd May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: திருச்செங்கோடு குறுவட்ட அளவிலான தடகளப்போட்டி கடந்த 24.08.2023 மற்றும் 25.08.2023 திருச்செங்கோடு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் சுமார் 40 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
அதில் மாணவிகள் பிரிவில் 10 தங்கப்பதக்கமும், 5 வெள்ளிப்பதக்கமும், 12 வெண்கலப் பதக்கமும் பெற்றனர். மாணவர்கள் பிரிவல் 19 தங்கப்பதக்கமும், 9 வெள்ளிப்பதக்கமும், 6 வெண்கலப் பதக்கமும் பெற்றனர். மேலும் 14 வயது பிரிவில் நிஷ்வந்த் என்ற மாணவனும், 17 வயது பிரிவில் சங்கீத் என்ற மாணவனும், 19 வயது பிரிவில் மௌனிஷ் என்ற மாணவனும் தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.
அதுமட்டுமல்லாமல் 129 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் நிறுவனத்தின் தாளாளர் முனைவர் ராஜன், ஆலோசகர் முனைவர் N.ராஜேந்திரன், தலைவர் ராஜா, செயலாளர் சிங்காரவேலு, நிர்வாகி ராஜராஜன், முதல்வர் சாரதா ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.