Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை 

ஆகஸ்டு 16, 2023 12:14

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.

குமாரபாளையம் செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கும் விழா குமாரபாளையம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நகர செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவர் தங்கராஜ் அவர்கள்  தலைமையில் நடந்தது.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவர் செல்வராஜ் மற்றும் மாநில பொதுச் செயலாளர் குமரகுருபரன், மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், ஈரோடு மாவட்ட தலைவர் உதய சங்கர், பங்கேற்று அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கினர்.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவர் செல்வராஜ் பேசியதாவது: மாணவ, மாணவிகள் தங்களது கல்வி அறிவை மட்டுமின்றி, பொது அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.  அதற்காக பல்வேறு வகையான நூல்களை படிக்க வேண்டும். மாணவ மாணவிகள் உயர் கல்வி பயின்று சமுதாயத்திற்கு பல நற்பணிகள் செய்திட வேண்டும். மாணவ, மாணவிகள் உயர் கல்வி படிப்பை முடித்தவுடன் அரசு பணிகளுக்காக தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும். மாணவ மாணவிகள் தங்களது மனதில் நல்ல  எண்ணங்களை பதிய வைக்க வேண்டும். அதற்கு பெற்றோர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் இதில் நகரச் செயலாளர் மகேந்திரன், தில்லையாடி வள்ளியம்மை மகளிர் அணி தலைவி மலர்க்கொடி செயலாளர் மல்லிகா பொருளாளர் காளியம்மாள் நகர பொறுப்பாளர்கள் பிரபு, சீனிவாசன், நடராஜன், கவிஞர் மல்லை ராமநாதன் மற்றும் கிளைச் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்