Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

த.மு.மு.கழகம் மற்றும் ம.நே.ம.கட்சி சார்பில் மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

ஜுலை 25, 2023 01:22

ராசிபுரம்:   ராசிபுரம் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மணிப்பூர் மாநிலத்தில் பாசிச பாஜக ஆட்சியின் தூண்டுதலால் கடந்த இரண்டு மாதங்களாக கிறிஸ்துவ பழங்குடி மக்களுக்கு எதிராக நடைபெற்றது வரும் வன்முறை வெறியாட்டத்தை கண்டித்து மமக சார்பில் மாநில தலைமை அறிவுறுத்தல் பேரில் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் நகரத் தலைவர் ரப்பானி என்கிற சாதிக் பாஷா தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு SMI மாவட்டச் செயலாளர் முகமது இக்பால் வரவேற்றார். மாவட்ட வழக்கறிஞர் அணி பொருளாளர் முகமது சமித், நகரச் செயலாளர் முகமது யாசிக், எருமப்பட்டி நகர துணை தலைவர் முஹம்மது முபாரக், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் ஜாகிர் ஆகியோர் கண்டன கோஷம் எழுப்பினர். 

மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பா.ராஜா முகமது, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சுல்தான் பாஷா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.  சிறப்பு அழைப்பாளராக தமுமுக தலைமை பிரதிநிதி தர்மபுரி சாதிக் பாஷா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட வழக்கறிஞர் அணி பொருளாளர் முஹம்மது சமித் நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்