Thursday, 23rd May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாம்பவர்வடகரையில் 4 இடங்களில் நலத்திட்ட உதவிகள்: மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்

ஜுலை 03, 2023 06:30

சுரண்டை: சாம்பவர்வடகரையில் 4 இடங்களில் திமுக கொடியேற்றி, நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் வழங்கினார்.

தென்காசி தெற்கு மாவட்டம், செங்கோட்டை ஒன்றியம், சாம்பவர்வடகரை பேரூர் திமுக சார்பில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி 4 இடங்களில் திமுக கொடியேற்று விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 

இதில் ஒன்றிய செயலாளர் ரவிசங்கர் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி முத்து, துணைத்தலைவர் நாலாயிரம் (எ)பாப்பா முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள்  சுடலை முத்து, அய்யப்பன், முன்னாள் செயலாளர் ராமச் சந்திரன், அருணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர்  முத்து வரவேற்றார்.

அதனை தொடர்ந்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் கலந்து கொண்டு திமுக கொடியேற்றி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். 

இந்நிகழ்ச்சிகளில் பேச்சாளர் கடையநல்லூர் இஸ்மாயில், மாவட்ட பிரதிநிதி விஜயகுமார், ஒன்றிய பிரதிநிதிகள் செல்வின் அப்பாத்துரை, சந்திரன், ஆவுடைதங்கம், பட்டமுத்து, வார்டு செயலாளர்கள் தேனையா, பாலமுருகன், பசுபதி, ராமச்சந்திரன், முத்துக்குமார், அண்ணாமலை, ஆப்ரகாம் ராஜதுரை, சுப்பையா, நிர்வாகிகள் சாமிதேவர், முனியசாமி, ராமர், ராஜேந்திரன்,அம்ஜத், முத்துமாலை, கிருஷ்ணன், சங்கர்ராமன், மாரியப்பன், அருணாசலம்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்