Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியில் உள்ள தனியார் திருமண மஹாலில் தென்காசி மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டிற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் திலகர் முப்பிடாதி தலைமை வகித்தார். தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ் ராஜா, பார்வையாளர் மகாராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராமநாதன், ராமராஜா மாவட்டச் செயலாளர்கள் ராஜலட்சுமி சுந்தர்ராஜ், சுப்பிரமணியன், நகரத் தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். நகர மகளிர் அணி தலைவி மகேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார்.
மேலும் மாநில விவசாய அணி துணைத் தலைவர் ஜெயக்குமார் பட்டியல் மாநில துணைத்தலைவர் கதிரேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் சங்கரன்கோவில் விவசாய அணி தலைவர் முத்துப்பாண்டி, பட்டியல் அணி தலைவர் ராமர், நகர இளைஞரணி தலைவர் விக்னேஷ், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அந்தோணி ராஜ், நிர்வாகிகள் ரஞ்சித், வேல்முருகன் உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் விவசாய அணி தலைவர் நாகராஜ் நன்றி கூறினார்.