Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
குமாரபாளையம் : குமாரபாளையம் அரசு பள்ளியில் போலீசார் சார்பில் மன மகிழ் மன்றம் துவங்கப்பட்டது. அரசு பள்ளிகளில் போலீசார் சார்பில் மன மகிழ் மன்றம் துவங்கப்பட்டு, மாணவ, மாணவியர்களின் திறன் மேம்பாட்டுக்கான பல்வேறு போட்டிகள் வைத்து பரிசு வழங்கி வருகின்றனர்.
இதில் ஒரு கட்டமாக குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் அருகில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் குமாரபாளையம் போலீசார் சார்பில் மன மகிழ் மன்றம் தொடங்கப்பட்டு, தலைமை ஆசிரியை கவுசல்யாமணி தலைமையில் விளையாட்டு போட்டிகள், கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி வைக்கப்பட்டது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி பரிசுகள் வழங்கினர். பெண்கள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விடியல் பிரகாஷ், தீனா, உள்பட பலர் பங்கேற்றனர்.