Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பேட்டை : பாளையங்கோட்டை புறநகர் வட்டார வள மையம் ரெட்டியார்பட்டியில் திருநெல்வேலி மாவட்டத்திற்கான மாற்று திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடந்த து..மருத்துவ முகாமில் 0-18 வயது வரை உள்ள குழந்தைகள் முகாமில் கலந்து கொண்டனர்.
முகாமில் கண் , காதுமூக்கு தொண்டை நிபுணர்,மனநோய் மருத்துவர், முடநீக்கியில் நிபுணர் கலந்துகொண்டு குழந்தைகளை பரிசோதனை செய்தனர்.முகாமில்அடையாள அட்டை வழங்குதல் முதலமைச்சர் காப்பீட்டு திட்டம், இலவச பேருந்து பயண சலுகை, இலவச ரயில் பயண சலுகை, தேசிய அடையாள அட்டை வழங்குதல், உதவி உபகரணங்கள் வழங்குதல், மற்றும் மாத உதவித்தொகை வழங்கப்பட்டன.
முகாமை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.மாவட்ட உதவி திட்ட அலுவலர் சிவராஜ், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஹரிராம், வட்டார கல்வி அலுவலர்கள் மாரியம்மாள் ,முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேற்பார்வையாளர் பொறுப்பு சுதா வரவேற்று பேசினார்.முகாமிற்கு தேவையான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் சிறப்பாசிரியர்கள் இயல் முறை மருத்துவர் சிறப்பாக செய்திருந்தனர்.