Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 16,994 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,038 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,37,10,027 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 16,994 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,30,45,350 ஆனது. தற்போது 1,39,073 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கோவிட் காரணமாக 47 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,25,604 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 199.47 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 18,92,969 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.