Thursday, 23rd May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

யோகி அரசின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர்: பிரியங்கா காந்தி

ஜனவரி 18, 2022 06:33

லக்னோ: உ.பி., யில் சுமார் 16 லட்சம் பேர் வேலையிழந்திருப்பதாகவும், கல்விக்கான பட்ஜெட் 5 ஆண்டுகளில் அதிகம் குறைக்கப்பட்டிருப்பதாகவும், முதல்வர் யோகி ஆதித்யநாத் அதைப் பற்றி பேச மறுக்கிறார் எனவும் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா குற்றம்சாட்டி உள்ளார்.

உ.பி.,யில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் சூடு பிடித்துள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் சமாஜ்வாதி, காங்கிரஸ் மீது கூர்மையான விமர்சனங்களை முன் வைக்கிறார். பதிலுக்கு கடந்த ஐந்தாண்டு கால பா.ஜ., ஆட்சி மற்றும் மத்திய அரசின் ஆட்சி குறித்து அகிலேஷ் யாதவ் விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்து பிரியங்கா வெளியிட்ட அறிக்கை: உத்தரப் பிரதேசத்தில், கடந்த 5 ஆண்டுகளில் 16.5 லட்சம் இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர். 4 கோடி மக்கள் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளனர். யோகி ஆதித்யநாத் அரசு ஐந்து ஆண்டுகளில் உத்தரபிரதேசத்தின் கல்விக்கான பட்ஜெட்டில் பெரியளவில் கை வைத்துள்ளது. பட்ஜெட் அதிகமாக இருந்திருந்தால், இளைஞர்களுக்கு புதிய பல்கலைக்கழகங்கள், இணையம், உதவித்தொகை, நூலகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் கிடைத்திருக்கும்.

யோகி ஆதித்யநாத் இதைப் பற்றி எல்லாம் பேச மறுக்கிறார். ஏனென்றால் அவரது ஆட்சி பற்றிய உண்மை தெரியவந்துவிடும் என்பதை அவர் அறிவார். இளைஞர்களே, இதுவே இந்தத் தேர்தலின் உண்மையான அஜெண்டா. இதைப் பற்றிய கேள்விகளைக் கேளுங்கள், உங்களைத் தவறாக வழிநடத்தியவர்களுக்கு உங்கள் ஓட்டுக்கள் மூலம் தக்க பதிலடி கொடுங்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்