Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மீண்டும் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 43,263 பேருக்கு தொற்று உறுதி

செப்டம்பர் 09, 2021 01:44

நாடு முழுவதும் அன்றாட கரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,263 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 43,263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3,31,39,981ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனாவில் இருந்து 3,23,04,618 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தி்ல் 40,567 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,93,614 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 338 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,41,749 என்றளவில் உள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் மொத்த எண்ணிக்கை 71,65,97,428 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 86,51,701 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

தலைப்புச்செய்திகள்