Monday, 3rd June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்புர்: திருப்பூர் இந்து முன்னேற்ற கழக நிறுவன தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது: சென்னை வடபழனி கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் ரூ. 300 கோடி மதிப்பிலான நிலத்தை தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அதிரடி நடவடிக்கையால் மீட்டு உள்ளார்.
இதற்கு தமிழக மக்களின் சார்பாக தமிழக அரசுக்கு இந்து முன்னேற்ற கழகம் பாராட்டு தெரிவித்து கொள்கிறது . இதை போல் தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில் சொத்துகளை எந்தவித பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைப்பதாகவும். அதற்கு இந்து முன்னேற்ற கழகம் தமிழக மக்கள் சார்பில் துணை நிற்கும் என்று கூறி உள்ளார்