Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செருப்புத்தைக்கும் தொழிலாளர்களுக்கு இந்திரா சுந்தரம் அறக்கட்டளை உதவி

மே 13, 2021 05:29

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக தமிழக அரசு 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது அதனால் திருப்பூரில் பனியன் கம்பெனி மற்றும் வர்த்தக நிறுவனம் மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அன்றாடம் வருமானத்தில் குடும்பம் நடத்தி வரும் செருப்புத்தைக்கும் தொழிலாளர்கள் பலரும் மிகுந்த இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனை அறிந்து இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிறுவன தலைவர் இந்திரா சுந்தரம் 15 குடும்பங் களுக்கு 15 நாட்களுக்கு தேவையான அரிசி பருப்பு மளிகை பொருட்களை தெற்கு காவல் நிலைய துணை ஆய்வாளர் ராமசாமி முன்னிலையில் வழங்கினார்

தலைப்புச்செய்திகள்