Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் உமர் அப்துல்லா

ஏப்ரல் 28, 2021 05:37

ஸ்ரீநகர்: தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியுமான உமர் அப்துல்லா கடந்த 9-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார் உமர் அப்துல்லா.

இந்நிலையில், 18 நாட்கள் கழித்து உமர் அப்துல்லா மீண்டும் மறு பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதன்மூலம் அவர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார்.

இது தொடர்பாக உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மூக்கடைப்பைத் தவிர வேறு எந்த அறிகுறிகளும் எனக்கு இல்லை. கடந்த 18 நாள்களுக்கு பின்பு சோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது என பதிவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்