Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை

ஏப்ரல் 27, 2021 06:26

மும்பை: நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. அதே நேரத்தில் மாநிலத்தில் தான் அதிகளவு கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் மாநிலத்தில் 5 லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஏப்ரல் 26-ந் தேதி (நேற்று) மாலை 6 மணி வரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். மாநிலத்தில் இதுவரை 1.48 கோடி பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். மும்பையில் உள்ள ஒரு மையத்தில் கொரோனா தடுப்பூசி போட காத்திருந்த மக்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

தற்போது மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 155 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இதில் 5 ஆயிரத்து 347 அரசு மையங்கள் ஆகும். 808 தனியார் மையங்கள் உள்ளன. மாநிலத்தில் அதிகபட்சமாக கடந்த ஏப்ரல் 3-ந் தேதி 4 லட்சத்து 62 ஆயிரத்து 735 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் தடுப்பூசி போடுவதில் மகாராஷ்டிரா புதிய சாதனையை படைத்து உள்ளது. மகாராஷ்டிரா உள்பட நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
 

தலைப்புச்செய்திகள்