Thursday, 23rd May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த போலி டாக்டர்: தாயும், சேயும் பலி

மார்ச் 21, 2021 07:49

சுல்தான்பூர்: உத்தரபிரதேசத்தில் போலி டாக்டர் மற்றும் ஆஸ்பத்திரியின் நிர்வாகி 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் நகரைச் சேர்ந்த பூனம் என்கிற 35 வயது பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு கடந்த வியாழக்கிழமை பிரசவ
வலி ஏற்பட்டதை தொடர்ந்து அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர் ராஜேந்திர குமார் சுக்லா பிரசவம் பார்த்தார். ராஜேந்திர குமார் சுக்லா அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த போது எதிர்பாராதவிதமாக அவர் பரிதாபமாக இறந்தார்.‌ மேலும் அவரது பச்சிளம் குழந்தையும் இறந்து போனது.

இதுகுறித்து பூனம் உறவினர்கள் டாக்டர் ராஜேந்திர குமார் சுக்லா மற்றும் ஆஸ்பத்திரி நிர்வாகி ராஜேஷ்குமார் சாக்னி மீது போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் ராஜேந்திரகுமார் சுக்லா போலி டாக்டர் என்பதும், அவர் 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்பதும்
தெரியவந்தது. 

அதேபோல் ஆஸ்பத்திரியின் நிர்வாகி ராஜேஷ்குமார் சாக்னி பிளஸ்-2 படித்து முடித்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2
பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தலைப்புச்செய்திகள்