Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி : அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாநில மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது.அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் சார்பில் வரும் 13 மற்றும் 14ஆம் தேதி ஆகிய இரு நாட்களில் மாநில மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அகில பாரத செயலாளர் முத்துராமலிங்கம் மற்றும் மாநில செயலாளர் சுசீலா ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்... அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் மாநில மாநாடு தமிழக எழுச்சி பால் அதன் வளர்ச்சி என்ற தலைப்பில், சொற்பொழிவுடன் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கலை கல்லூரியில் நடைபெற உள்ளது.
மாநாட்டிற்கு உள்துறை இணை அமைச்சர் கிசான் ரெட்டி, அகில பாரத இணை அமைப்பாளர் லட்சுமணன் ஆகியோர் சிறப்பு விருந்தின்ராக கலந்து கலந்து உரையாற்ற உள்ளனர். முன்னாள் அகில பாரத தலைவர் மருத்துவர் சுப்பையா சண்முகம், சுதந்திரம் பெற்று அகில இந்திய பாரதீய வித்யார்த்தி பரிஷத் துவங்கி 75ஆம் ஆண்டு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
மேலும் மாநாட்டில் மாணவர்களின் கல்வித் துறை சார்ந்த தீர்மானங்களும், தமிழக நிலை குறித்த தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன. இந்த மாநாட்டில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், தேர்தல் விழிப்புணர்வு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து மாணவ தலைவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், சமூக நல விரும்பிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொள்ள உள்ளனர் என தெரிவித்தனர்.