Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரெயிலில் இருந்து தவறி விழுந்த மாணவர் பலி

பிப்ரவரி 10, 2021 01:59

மீஞ்சூர்: மீஞ்சூர் அருகே உள்ள நாலூர் பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 40). இவரது மகன் கோகுலகிருஷ்ணன். இவர் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு செல்வதற்காக மீஞ்சூர் ரெயில் நிலையம் சென்று ரெயிலில் பயணம் செய்தார்.

அனுப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் சென்று கொண்டிருந்த போது கோகுலகிருஷ்ணன் கால் தவறி கீழே விழுந்து விட்டார். அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
 

தலைப்புச்செய்திகள்