Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

12-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா -பள்ளி மூடல்

ஜனவரி 21, 2021 10:35

சேலம்: தமிழகம் முழுவதும் 10 மாதங்களுக்கு பிறகு கடந்த 19-ந்தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற 12-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே பெரிய கிருஷ்ணாபுரம் மாதிரி பள்ளிக்கு சென்ற தும்பல் பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா தொற்று உறுதியான 12-ம் வகுப்பு மாணவி விடுதியில் தங்கியிருந்ததால் அவருடன் தொடர்பில் இருந்த 36 மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் பள்ளி மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தலைப்புச்செய்திகள்