Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

 இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 10,064 பேர் பாதிப்பு- 137 பேர் பலி

ஜனவரி 19, 2021 10:54

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் குறைந்து கொண்டே வருகிறது. கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மட்டும் சற்று அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் இன்றைய மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 10064 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் 17411 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 137 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக இதுவரை 1,05,81,837 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,00,528 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,02,28,753 பேர் குணமடைந்து உள்ள நிலையில், 1,52,556 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்