Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் குறைந்து கொண்டே வருகிறது. கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மட்டும் சற்று அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் இன்றைய மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 10064 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் 17411 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 137 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் ஒட்டுமொத்தமாக இதுவரை 1,05,81,837 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,00,528 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,02,28,753 பேர் குணமடைந்து உள்ள நிலையில், 1,52,556 பேர் உயிரிழந்துள்ளனர்.