Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் புராதான கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா

டிசம்பர் 27, 2020 08:11

தாம்பரம்: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் புராதான கோவிலில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை  பின்பற்றி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது

சனீஸ்வர பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு 5:22 மணிக்கு பிரவேசித்தார் இதனை முன்னிட்டு  பழமை வாய்ந்த    கோவில் என்பதால் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நேற்றிலிருந்து  மகா பூர்ணாஹுதி  தீபாராதனை, கலச அபிஷேகம்,  விக்னேஸ்வர பூஜை, நவகிரக பூஜை, உள்ளிட்ட விசேஷ பூஜைகள் நடைபெற்று வாசனை திரவியங்கள் தீப தூப ஆராதனைகள் நடைபெற்று  சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் அருள்மிகு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் பரிகார பூஜைகளும் நடைபெற்றது, 

கொரோனா நோய்த் தொற்று காரணமாக முககவசம் அணிந்த பக்தர்கள் மட்டும் கிருமி நாசினியால் கைகளில் சுத்தபடுத்திய பின்னரே அனுமதிக்கபட்டனர்.  குறைந்த அளவிலான பக்தர்கள்  மட்டுமே பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனவழங்கபட்டது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டது.

தலைப்புச்செய்திகள்