Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பெரம்பலூர் : செட்டிகுளம் கிராமத்தில் லயன்ஸ் கிளப் சார்பாக நடைபெற்ற இரத்ததான முகாமில் இரத்தக் கொடையாளர்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா,செட்டிகுளம் கிராமத்தில் சேவைக்காக செயல்படும் செட்டிகுளம் லயன்ஸ் கிளப் மற்றும் பெரம்பலூர் முத்து பரிசோதனை மையம் மற்றும் மெடிக்கல் டிரஸ் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் லயன்ஸ் கிளப் தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார்.
செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் கலா தங்கராசு,சாசன தலைவர் கோபிநாத்,செயலாளர் நல்லசாமி,நிர்வாக அலுவலர் பெரியசாமி,பொருளாளர் ராமராஜ்,செட்டிகுளம் லயன்ஸ் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இளைஞர்கள்,பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள், என பலரும் பங்கேற்று இரத்த தானம் செய்தனர்.
கொடையாளர் அனைவருக்கும் குளிர்பானங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பின்பு கலந்து கொண்ட கொடையாளர்கள்,பொதுமக்கள் பலரும் இரத்த அழுத்தம்,சர்க்கரை நோய் பரிசோதனை, செய்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செட்டிகுளம் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள்,மாவட்ட நிர்வாகிகள்,வட்டார நிர்வாகிகள், முன்னாள் லயன்ஸ் கிளப் தலைவர்கள் மற்றும் செட்டிகுளம் இளைஞர்கள் செய்திருந்தனர்.