Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொங்கல் பண்டிகை: பஸ் முன்பதிவு துவக்கம்

டிசம்பர் 11, 2020 08:15

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் வெளியூர் செல்பவர்களுக்கான பேருந்து முன்பதிவு இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் வரும் 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. இருப்பினும், கரோனா பாதிப்புக்குப் பிறகு தீபாவளி பண்டிகைக்கு வெளியூர் சென்ற மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பணிகள் இன்றுமுதல் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவத்துக் கழகப் பேருந்துகளில் முன்பதிவு செய்யலாம் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே. இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இதற்காக மக்கள் www.tnstc.in, tnstc official app, www.redbus.in, www.paytm.com,
www.busindia.com ஆகிய வலைத்தளங்களில் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்