Sunday, 16th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீட்-க்கு எதிராக நடிகர் சூர்யா போல பேசினால் வருமான வரித்துறை மூலம் மிரட்டுது பா.ஜ.க.

செப்டம்பர் 18, 2020 07:03

திருச்சி:நீட் விவகாரத்தில் முதல்வர் பேசியது மட்டும் ஒளிபரப்பியவர்கள், நாங்கள் கொடுத்த பதிலடியை ஒளிபரப்பவில்லை.  பா.ஜ.க.வின் கொள்கைகளை பற்றி விமர்சிப்பவர்களை மத்திய அரசை வருமான வரித்துறையை வைத்து மிரட்டும் செயல்களில் ஈடுபடுகிறது,'' என்று தி.மு.க.வின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு குற்றம்சாட்டினார். திருச்சியில் தந்தை பெரியாரின் 142வது பிறந்தநாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது உருவுருவச்சிலைக்கு முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உருவுருவச்சிலைக்கு முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு கே.என்.நேரு பேட்டியளித்ததாவது: மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க. கையில் முழுக்க, முழுக்க இந்தியா உள்ளது. இதனால் நடிகர் சூர்யா போன்ற நடிகர்கள் நீட்டுக்கு எதிராக பேசினாலும், மக்களுக்கு தேவையான கொள்கைகள் குறித்து பேசினால் வருமான வரியை வைத்து மிரட்டும் செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால், நீட் தேர்வை பொறுத்தவரை தமிழக மக்களின் கொள்கை வழிதான் வெற்றிபெறும். துணை முதல்வர் பதவி குறித்து காங்கிரஸ் பேசவில்லை என்று கே.எஸ்.அழகிரி மறுத்துள்ளார். சட்டசபையில் முதல்வர் பேசியதை மட்டுமே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதற்கு தி.மு.க.வினர் கவுன்டர் கொடுத்தது எதுவும் வெளியிடப்படவில்லை.

ஜல்லிக்கட்டை தடை நீக்கம் போல, நீட் தேர்விற்கு தடை கேட்டு பெறுவோம். நீட் தேர்வுக்கு தி.மு.க. ஆட்சியில் அனுமதி அளித்ததாக கூறுவது தவறு. நீட் தேர்வு குறித்து ஆய்வு நடத்த மட்டுமே தி.மு.க. ஆட்சி காலத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. இதுகுறித்து பேசுபவர்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அனுமதியை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்டது. அது குறித்து பேச மறுக்கின்றனர். விவசாயிகள் கடன் வழங்கும் திட்டத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து கண்டுபிடித்து விட்டோம் என்று சட்டசபையில் அமைச்சர் கூறுகின்றார். 150 கோடி ரூபாய் அளவில் நடைபெற்ற ஊழலில் 70 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். எங்களைப் பொறுத்தவரை உண்மையான அளவு பணத்தை திரும்பப் பெற்று உண்மையான விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு முதன்மை செயலாளர் கே.என்.நேரு கூறினார். 

தலைப்புச்செய்திகள்