Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம்: சிவனடியார் சரவணன் இறப்பிற்கு உரிய நீதி வேண்டி இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா அமைப்பினர் கும்பகோணம் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த தேவூர் புளியம்பட்டி, குண்டாங்கல்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவனடியார் சரவணன் (42). இவர் கடந்த 20-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தேவூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் தன்னை தகாத வார்த்தையில் திட்டி, அடித்து துன்புறுத்தியதாக சரவணன் வீடியோ பதிவு செய்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனை தொடர்ந்து கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநில செயலாளர் பாலா தலைமையில், உயிரிழந்த சரவணன் சுவாமிகள் மரணத்திற்கு தொடர்புடைய உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் கைது செய்யக்கோரியும், சாமியார் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரியும், கும்பகோணம் நீதிமன்ற ரவுண்டானாவில் இருந்து நடந்து சென்று கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து, முதல்வருக்கு கடிதம் அனுப்பினர்.
இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய், இந்து மகாசபைஆலய பாதுகாப்பு பிரிவுமாநில தலைவர் வேல்முருகன், மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.