Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்?

ஜுலை 19, 2020 06:14

சென்னை:  சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் திரைத் துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு  மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம ஆசாமி, நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், அது வெடிக்கும் என்றும் கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.  ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நடிகர் அஜித் குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

தகவலறிந்து உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் நடத்திய சோதனை நடத்தப்பட்டது. அப் போது வீட்டில் நடிகர் அஜித், தனது குடும்பத்தினருடன் இருந்தார். வெடிகுண்டு இருப்ப தாக வந்த தகவலை போலீசார் தெரிவித்ததும், நடிகர் அஜித் முழு ஒத்துழைப்பு வழங்கினார்.

போலீசாரை முககவ சத்துடன் ஒவ்வொரு அறையாக அழைத்துச் சென்று சோதனை செய்ய செய் தார். போலீசார் சுமார் 1 மணிநேரம் சோதனை செய்தும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர்தான் தொலைபேசியில் வந்த மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. போலீஸ் காவல் கட்டுப் பாட்டு அறைக்கு வந்த புகாரை அடுத்து போலீசார் அந்த மிரட்டல் ஃபோனை ஆய்வு செய்தனர்.

அதில் செல்போன் எண் மரக்கா ணம், புதுச்சேரி பகுதியில் இருப்ப தாக தெரியவந்தது. போலீசார் நடத்திய விசார ணையில் மிரட்டல் விடுத்தது மரக்காணத்தை சேர்ந்த புவனேஸ்வரன் எனத் தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட புவனேஸ் வரன், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் வீட்டுக்கும் இதுபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைது செய்யப்படவர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்