Monday, 3rd June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுச்சேரி: தமிழகத்தைபோல் புதுச் சேரியிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊர டங்கு அமல்படுத்தப் படு வது தொடர்பாக அரசு சார்பில் எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை என முதல்வர் நாராயணசாமி தெரிவித் துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பர வலை தடுக்க புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக் கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
புதுவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழ கத்தை போல் புதுச்சேரியிலும் ஞாயிற் றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று சுகாதா ரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் முதல்வர் நாராயணசாமியிடம் வலியுறுத்தியுள்ளார். புதுவையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத் தப்படும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை ஆனி மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் என்பதால் அன்றைய தினம் நிறைய சுப நிகழ்ச்சி களுக்கு ஏற் பாடு செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு தொடர்பான தகவல் சுப நிகழ்ச்சிகள் நடத்த உள்ளவர்கள் மத்தியில் அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் நாரா யணசாமி கூறுகையில், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கை அமல் படுத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன. அதே நேரத்தில் முழு ஊரடங்கு வேண்டாம் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த முழு ஊரடங்கு தொடர்பாக அரசு சார்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு ஏதே னும் முடிவெடுத்தால் அரசு உடனடி யாக மக்களுக்கு தெரிவிக்கும். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.