Monday, 3rd June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், 51 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
தன் விருப்ப நிதியிலிருந்து, இத்தொகையை ஒதுக்கியுள்ளார்.அதன்படி, ஏப்., 1ல், 11 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. நேற்று, இரண்டாம் தவணையாக, 40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு, உதவி செய்வதற்காக, இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.